அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Thursday, 25 April 2024

arrowமுகப்பு
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி

அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



ஜீவன்

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


எனது வீடு …   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: எ.ஜோய்  
Monday, 05 June 2006

ஜன்னல் கண்ணாடியை
ஊடறுத்து
உள் நுழையும்
சூரிய ஒளி போல்
உன் நினைவுகள்
என்னுள் பரவுகிறது

யாரோ குறுக்கு மறுக்காக
அந்த அறையில்
நடந்து கொண்டிருக்கிறார்கள்

உரியவன் வந்திருக்கிறேன்
என்ற குரலுக்கு
பதில் இன்றி
கதவு மூடியே கிடக்கிறது

உள்ளே முருங்கை மரம்
பட்டுப் போயிருக்கலாம்
அல்லது காய்த்துக் குலுங்கலாம்

கிணத்தடியில் வாளியின் ஒலி
கேட்கிறது
நான் விட்டு வந்த மீன்கள்
இன்னமும் எனக்காக
காத்திருக்கலாம்

யாராவது
கதவைத் திறவுங்கள்
அறை மாடத்தில்
கட்டப்பட்டிருந்த தூளியில்
கொஞ்சம் நான்
உறங்க வேண்டும்

என்னை
கால்களில் வளர்த்தி
எண்ணெய் தடவி
மூக்கு நிமிர்த்தி
குளிப்பாட்டிய
அம்மம்மாவின் ஆத்மா
அங்கு இன்னும்
குடி கொண்டிருக்கலாம்

தயவு செய்து
கதவைத் திறவுங்கள்
வனவாசம் முடித்து
வீடு திரும்பிய
இந்தப் பைத்தியக்காரனிடம்
இறுதியாக எஞ்சியிருப்பது
இந்த வீடும்
கொஞ்ச நம்பிக்கையும் தான்

இருத்தல் மீது
நம்பிக்கையற்றுப் போகும் போது
யார் யாரோ சொல்லுகிறார்கள்
இந்த வீடு
எனக்குச் சொந்தமில்லை என்று ! …

17-03-2006


     இதுவரை:  24806310 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 3909 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com