அப்பால் தமிழ்
 
 

 

Advertisement

  
   Tuesday, 03 October 2023

arrowமுகப்பு arrow வண்ணச்சிறகு arrow தோகை - 34 arrow கருணாகரன் கவிதைகள்
புதிய ஆக்கங்கள்
எழுத்துக்கும் கற்பு தேவை!
இரண்டு கவிதைகள்
நல்ல நண்பன்
இசையை மட்டும் நிறுத்தாதே.
நாள்காட்டி









அதிகம் வாசித்தவை
தொடர்பு
ஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்
குறும்படம் பார்க்க!
போருக்குப் பின்
மனமுள்

ஓவியம்



மூனா

அப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க
RSS


கருணாகரன் கவிதைகள்   PDF  அச்சுப்பிரதி  மின்னஞ்சல் 
எழுதியவர்: கருணாகரன்  
Wednesday, 16 May 2007

01.

பறவைக்காதல்
 
பறவையின் சிறகில்
காத்திருக்கிறது பயணமும் பயணவெளியும்
பறவையின் உயிரும்
அழகும்
பறவையின் அடையாளமும்
 
அதன் சிறகில்
நிகழ்கிறது பயணமும் பயணவெளியும்
காற்றின் துணையும்
 
வெளியிலும் காற்றிலும்
தன்னை நிகழ்த்தும் பறவை
அடைகிறது தன் புள்ளியை
எனினும் அது தன் பயணத்தின்
சுவடுகளை விட்டுச்செல்லவுமில்லை
எடுத்துச்செல்லவுமில்லை
 
காற்றையும் சிறகையும் இணைக்கும் நுட்பத்தை
கற்ற பறவை சொல்லித்தருமா எனக்கும்
தன் வாழ்தலின் நுட்பங்களை
 
காற்றில் தன்னை நிகழ்த்தும்
நுட்பத்தினூடாக
அது கட்டுகிறது
தன் பயணக்கூட்டை
 
சிறகிலேயே
அதன் பயணமும் இளைப்பாறலும் நிகழ்கின்றன
அதனதன் தருணங்களில்
கூடவே
பயணிக்கும்போது இளைப்பாறலும்
இளைப்பாறலின்போது பயணமும்.

 

02.


மீள்குடியேறிகளின் கதை
அல்லது
எலும்புக்கூட்டின் மனைவி
 
ஆழ்கடலின் கீழிருந்து
குளிரில் நடுங்கியபடி வருகிறது நிலவு
யுத்தம் ஓய்ந்திருக்கும்
அல்லது
தணிந்திருக்கும் இந்த நாட்களில்
காயங்கள் ஆறி
குருதிக்கறை நீங்கி
தயக்கமும் அச்சமும் கலைய
நிலவு எழுந்து வருகிறது
 
காயங்களும் குருதிப்பெருக்கும்
பலியும் அடங்கி 
கடலும் மெல்ல
நீலமாகி வருகிறதுது என்று சொல்கிறார்கள்
சாழ்வைப் பொத்திக் காத்திடலாம்
என்றோடியவள்
காயங்களோடு திரும்புகிறாள்.
 
இடம்பெயர்ந்தோர் அட்டை
காணாமற் போனோர் பதிவட்டை
எலும்புக்கூடொன்றின் துயருற்றும் புகைப்படம்
மரணச்சானறிதழ்
தந்தையை இழந்த பிள்ளைகளுக்கான அட்டைகள்
மீள்குடியேறக்கோரும் விண்ணப்பம்
நிகழ்காலத்தின் சருகடர்ந்த
பாழ் விழிகளோடு
மூன்று பிள்ளைகள்
இன்னும் இதயம் நிரம்பிய
 à®¤à¯à®¯à®°à®®à¯ கோபம்
ஆற்றாமை எல்லாவற்றோடும்
ஒரு மீள் குடியேறியாக
இன்னும் அகதியாக.
 
யுத்தம் பற்றி அவளுக்கதிகம்
தெரிந்திருக்கவில்லை
ஆனால்
அவளின் மடியில் அது கிடந்தது
பலிகொள்ளும் சாபத்தோடு
ஒரு நீசக்குழந்தையாக
 
அவள் ஆறுவதற்கு மரங்களுமில்லை
குவிக்கப்பட்டிருந்த எலும்புக்கூடுகளில்
எது தன் கணவனுடையதென்று
காணமுடியாது தடுமாறினாள் ஒருநாள்
இன்றோ
இடித்தழித்து வெறுமையாக்கப் பட்டிருக்கும்
சூனிய வெளியில்
எது அவளுடைய வாழ்விசைந்த நிலமென்று
தெரியாதிருக்கிறாள்
இழந்த வாழ்வின் சிறுதுண்டேனும்
கை சேராதவென்றும்
எதிர்காலத்தின் முகம்
பீரங்கியின் குழல் வாயா
அல்லது
நிலவு அஞ்சாத கடல்வெளியா
என்றும்கூட.

 

03. 

இனி

 
சவப்பெட்டியின் நிழலில் துளிர்த்த வேர்கள்
அதி பயங்கரமாகவும்
சாவகாசமாகவும்
வளர்ந்து செல்கின்றன
என் தூக்கத்தினூடும்
விழிப்பினூடும்
 
ஞபகங்கொள்ள முடியாத
பூச்செடிகளில்
யாரோ விட்டுச் சென்ற
புன் சிரிப்பின்மீது
இரத்தத்துளிகளின் நடனம் பாம்பின் நளினத்தோடு
 
காதருகில்
அச்சமூட்டும் ரகசியங்களைச்சொல்லும் எதிரி
அழைத்துச் சென்ற விருந்தில்
எதிர்பாராத விதமாகக் கண்டேன்
கிறிஸ்துவை
 
தலைகவிழ்ந்தபடியிருந்தார் கிறிஸ்து
தியானமா அவமானமா
கனவுகளில் எரிந்து கொண்டிருந்தது காலம்
 
பன்னூறு ஆண்டுகால
தோல்வியின் நிழலைப்பிரதிபலிக்கும்
அந்தத விழிகளில்
சகிப்பிpன் கடைசிக்கணம்
முடிவடைவதைக் கண்டேன்

இங்கே அழுத்தவும்இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(1 posts)


மேலும் சில...

கருத்துக்கணிப்பு

செய்திச் சுருக்கம்
TN: இலங்கைச் செய்திகள்
Tue, 03 Oct 2023 11:50
TamilNet
HASH(0x55a366c11760)
Sri Lanka: English version not available


BBC: உலகச் செய்திகள்
Tue, 03 Oct 2023 12:03


புதினம்
Tue, 03 Oct 2023 11:50
















     இதுவரை:  24070878 நோக்கர்கள்   |  

இணைப்பில்: 5112 நோக்கர்கள்


காப்புரிமை © அப்பால் தமிழ்
  |  வலையமைப்பு @ நான்காம் தமிழ்  |  நன்றிகள் @ mamboserver.com